இந்திய நட்சத்திர வீரரான பும்ரா டிவி தொகுப்பாளினியான சஞ்சனா கணேசனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தனக்கு விடுப்பு தர கோரி பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்திருந்தார்.அதன் பின் இவரது விடுப்புக்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது
இந்த நிலையில் பும்ரா விடுப்பு கேட்ட அதே நேரத்தில் அனுபமா பரமேஸ்வரன் தனக்கு விடுமுறை என்று ஷேர் செய்த பகிர்வு வைரலாகி இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், திருமணத்திற்காக தான் பும்ரா விடுப்பு கேட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது .ஆனால் அதற்கு நடிகை அனுபமா பரமேஸ்வரனின் தாயார் இந்த தகவல் அனைத்தும் வதந்தி என்று கூறி முற்றுப் புள்ளி வைத்தார் .
இந்த நிலையில் தற்போது பும்ரா தொலைக்காட்சி தொகுப்பாளினியான சஞ்சனா கணேசனை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.சஞ்சனா கணேசன் பிரபல ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தொகுப்பாளினியாக உள்ளார். அதற்கு முன் ஐபிஎல் போட்டிகளையும், ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியதுடன் மிஸ் – இந்தியா போட்டியில் இறுதி சுற்று வரை சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதனு பிரபல பொழுதுபோக்கு தொலைக்காட்சியான எம்-டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான ஸ்பிலிட்ஸ் வில்லாவின் ஏழாவது சீசனில் பங்கேற்று பிரபலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் கிரிக்கெட் வீரர் பும்ராவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.இந்த அழகிய திருமண ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…