டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க விமானம் மூலம் இலங்கை புறப்பட்டுச் சென்றது இந்திய கிரிக்கெட் அணி.
இந்திய கிரிக்கெட் வருகின்ற ஜூலை 13- ஆம் தேதி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கொண்ட கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க விமானம் மூலம் இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி புறப்பட்டுச் சென்றது. இந்த தொடரில் இந்திய அணியை வீரர் ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார். அணியில் ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், இஷன் கிஷன், குல்தீப் யாதவ், தேவ்தத் படிக்கல், யுஸ்வேந்திர சாகல், உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில், இந்திய அணியின் கேப்டனாக அணியை நான் வழிநடத்த கிடைத்திருக்கும் வாய்ப்பு மிக பெரிய கவுரவம். இந்த தொடருக்காக நங்கள் சிறப்பாக தயாராகி வருகிறோம். சிறந்த பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணிக்காக நான் வங்கதேச தொடரில் கேப்டனாக விளையாடி உள்ளேன். இந்த தொடரில் அவர் எங்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது மிகவும் சிறப்பானது விஷயம். ஒரு அணியாக நாங்கள் இணைந்து நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…