இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே,தனது நீண்டநாள் காதலியை நேற்று திருமணம் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே,அவரது நீண்டநாள் காதலியான அஞ்சும் கானை நேற்று (வெள்ளிக்கிழமை) திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து,திருமண விழாவில் எடுத்த சில புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம்,பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். மேலும்,திருமணம் குறித்து சிவம் கூறுகையில்: “நாங்கள் அன்பை விட அதிகமான அளவு நேசித்தோம்,இப்போது,எங்களது வாழ்க்கை தொடங்குகிறது.”என்று பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து,சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் 2019 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான டி-20 போட்டியில் சிவம் இந்தியாவில் அறிமுகமானார்.இதுவரை அவர் 13 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.அதில் அவர் அரைசதம் அடித்துள்ளார் மற்றும் 3/30 சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்களைக் கொண்டுள்ளார்.இதைத் தவிர 2019 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…