இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 321 ரன்களை குவித்தது. ரன் குவிப்பில் ஈடுபட்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
அதிரடி மன்னன் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது 81 ரன்கள் கடந்த போது இந்த சாதனையை நிகழ்த்தினார். இதனை தனது 205 வது இன்னிங்சிலே விராட் கோலி எட்டியது தான் ஆச்சரியத்திலும் அதியம்.கிரிக்கெட் கடவுள்,ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.சச்சின் 259 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்ததே கிரிக்கெட் உலகில் சாதனையாக இருந்த நிலையில் ஆக்ரோச மற்றும் அதிரடிக்கு சொந்தக்காரரான விராட் கோலி 205 இன்னிங்கிலே இந்த சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இந்த ஒருநாள் போட்டி முடித்த விராட் கோலி தனது நிகழ்த்திய சாதனை மற்றும் இந்திய அணிக்காக விளையாடுவது குறித்த விரிவான பேட்டி ஒன்றை அளித்தார். விராட் கோலி கூறுகையில் எனது நாட்டிற்காக விளையாடுவதை நான் மிகப்பெரிய பெருமையாக நினைக்கிறேன். 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய போதிலும், பெரிய அளவில் சாதித்ததாக நான் நினைக்கவில்லை. நம் நாட்டிற்காக சர்வதேச போட்டியில் விளையாடும்போது ஒவ்வொரு ரன்கள் எடுக்க கடினமாக உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்.சோர்ந்த நிலையில் டைவ் பற்றிய கேள்விக்கு ஒரே ஓவரில் 6 முறை டைவ் அடிக்க வேண்டும் என்றாலும் கூட இந்திய அணிக்காக நான் அதை செய்வேன்.
இது என்னுடைய வேலை. நான் இந்திய அணியில் இதற்காக தான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இது என்னுடைய வேலையோட ஒரு பகுதியாக தான் பார்க்கிறேன் என்று அதிரடி வீரர் அமைதியாக கூறினார்.விராட்டின் தெரிக்கவிடும் பேட்டிங்கை பாராட்டதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
DINASUVADU
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…