இன்றைய 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் 3 மணியளவில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர்.
இந்திய அணி:
பிருத்வி ஷா, ஷிகர் தவான் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், நிதீஷ் ராணா, ஹார்திக் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம், ராகுல் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சகாரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணி:
அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா (விக்கெட் கீப்பர்),பானுகா ராஜபக்சே , தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷானகா (கேப்டன்), ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருணாரத்ன, அகில தனஞ்சயா, துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்யுமா..? அல்லது இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…