இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு.., இலங்கை ஆறுதல் வெற்றி பெறுமா..?

Default Image

இன்றைய 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் 3 மணியளவில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர்.

இந்திய அணி:

பிருத்வி ஷா, ஷிகர் தவான் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், நிதீஷ் ராணா, ஹார்திக் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம், ராகுல் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சகாரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி:

அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா (விக்கெட் கீப்பர்),பானுகா ராஜபக்சே , தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷானகா (கேப்டன்), ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருணாரத்ன, அகில தனஞ்சயா, துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்யுமா..? அல்லது இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்