கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள 19-வது லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே ஒரு போட்டியில் மோதினால் அந்த போட்டிக்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி என்றால் சொல்லியா ஆகவேண்டும் கண்டிப்பாகவே இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்ற பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த இரண்டு அணிகளும் இந்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நல்ல பார்மில் இருக்கிறார்கள். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றியை பதிவு செய்தது. அதைப்போல, பாகிஸ்தான் அணி நெதர்லாந்து, இலங்கை ஆகிய அணிகளுடன் மோதி வெற்றிபெற்றுள்ளது.
வெற்றிகள் எல்லாம் முறியடிக்கப்படும்! இந்தியாவுடனா போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்!
இரண்டு அணிகளும் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கும் நிலையில், இன்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
விளையாடும் வீரர்கள்
இந்தியா :
ரோஹித் சர்மா(c), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(wk), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
பாகிஸ்தான்:
அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம்(c), முகமது ரிஸ்வான்(wk), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்
இந்திய அணியில் டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த சுப்மன் கில் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். அவருக்கு பதிலாக விளையாடி வந்த இஷான் கிஷன் இந்த போட்டியில் பெஞ்சில் இருக்கிறார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…