கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி …!வெயிட் வாஸ் செய்தது இந்தியா…!

Default Image

இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணி  6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை – சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் அடித்தது.அதிகபட்சமாக பூரன் 53* ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  இந்திய அணி கடைசி பந்தில் வெற்றி இலக்கை அடைந்தது.இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 92 ரன்கள் அடித்தார்.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்