மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இன்று இரண்டாவது டி-20 போட்டி நடைபெறுகிறது.கேரளாவில் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பீல்டு மைதானத்தில் ( Greenfield Stadium) நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்கியது.இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்தது.சிறப்பாக விளையாடிய சிவம் துபே 54 ரன்கள் குவித்தார்.வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் ,ஹேடன் வால்ஷ் ஆகிய இருவரும் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார்.171 ரன்கள் இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்கியது. மேற்கு இந்திய தீவுகள் அணியில் இறங்கியவர்கள் தங்களது பங்கிற்கு அதிரடி காட்டினார்கள். லீவிஸ் 40 ரன்கள் ,ஹெட்மேயர் 23 ரன்களில் வெளியேற சிம்மன்ஸ் மற்றும் பூரான் ஜோடி வெற்றியை உறுதி செய்தது.18. 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.களத்தில் சிம்மன்ஸ் 67* மற்றும் பூரான் 38* ரன்களுடன் இருந்தனர்.8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்தியாவுக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது மேற்கிந்திய தீவுகள் அணி.
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…