பலித்தது வானிலை ! இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து

Default Image

இந்தியா – தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதலாவது டி-20 போட்டி இன்று  ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்ம சாலாவில் நடைபெற இருந்தது.ஆனால் ஆரம்ப முதலே மழை மிகவும் தீவிரமாக இருந்தது.இறுதியாக  முதல் டி-20 போட்டி மழையால் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே தர்மசாலாவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து இரண்டாவது டி-20 போட்டி வருகின்ற 18-ஆம்  தேதி மொகாலியில் நடைபெறுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்