இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.அதன்படி,நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வந்தபோது 46.1 ஓவரில் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால்,போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், மழை நின்றதும் 3 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில்,பிறகு மீண்டும் மழை குறுக்கிட்டதால் 2-ஆம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
இந்திய அணி 46.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளனர்.தற்போது களத்தில் கேஎல் ராகுல் 57*, பண்ட் 7* ரன்கள் எடுத்து உள்ளனர். இங்கிலாந்து அணி 58 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில்,இன்று இரு அணிகளுக்கிடையேயான 3 வது நாள் ஆட்டம்,இன்று மாலை 3.30 க்கு நடைபெறவுள்ள நிலையில்,நேற்றைப் போலவே, வானிலை இன்றும் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…