எங்களின் மும்மூர்த்திகளான ஸ்டார்க், ஹசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய வீரர்களால் விராட் கோலியை கட்டுப்படுத்துவோம் என்று ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.இந்த தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்நிலையில் சென்ற முறை இந்தியா ஆஸ்திரேலிய தொடரை 0-2 என இழந்தது எனினும் விராட் கோலி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு சதங்களுடன் அவர் 692 ரன்கள் குவித்தார். இதில் சராசரி 86.50 என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நான் பந்து வீச்சாளர் ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட் , பேட் கம்மின்ஸ் ஆகிய மூவரும் எவ்வளவு கடின பயிற்சி எடுத்திருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். இதுவே விராட்க்கு போதுமான நெருக்கடியை கொடுக்க முடியும். இந்த உலகத்தில் எல்லோருமே மனிதர்கள்தானே மேலும் விராட் சிறந்த வீரர் என்பது எங்களுக்கும் தெரியும். நான் அவரை பெங்களூருவில் தான் முதன்முதலாக பார்த்தேன்.அவர் மிக சிறப்பான வீரர். ஆனால் விராட்டை வீழ்த்தக்கூடிய பந்து வீச்சாளர்களை நாங்கள் பெற்றுள்ளோம்.எங்கள் அணியின் மூன்று பேரும் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களின் குழு. மேலும் இந்த போட்டி மிகவும் சிறப்பான போட்டியாக இருக்கப்போகிறது.இவ்வாறு தெரிவித்த அவர் நாங்கள் இந்தியாவை வீழ்த்தி இந்த போட்டியில் முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…