சதத்தை தவற விட்ட பண்ட்; முதல் நாள் ஆட்ட முடிவில் 357 ரன்கள் எடுத்த இந்தியா..!

Default Image

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியானது, இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.   டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா , மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் 6 பவுண்டரி உட்பட 29  ரன்கள் எடுத்தார்.

பின்னர் ஹனுமா விஹாரி களமிறங்க நிதானமாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 33 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிங்கிய கோலி, ஹனுமா விஹாரி இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இப்போட்டியில் பொறுமையாக விளையாடிய கோலி அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லசித் எம்புல்தெனிய வீசிய பந்தில் 45 ரன் எடுத்து போல்ட் ஆனார்.

சிறப்பாக விளையாடி வந்த ஹனுமா விஹாரி அடுத்த 2 ஓவரில் அரைசதம் விளாசி  58 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் 27 ரன் எடுத்து நடையை கட்டினார். மத்தியில் இறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார். இதனால், ரிஷப் பண்ட்  சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி , 4 சிக்ஸர் என 96 ரன் எடுத்து விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்து களம் கண்ட ரவீந்திர ஜடேஜா , அஸ்வின்  சிறப்பாக விளையாடி வருகின்றனர். முதல்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 85 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 357 ரன் எடுத்துள்ளனர். களத்தில் ரவீந்திர ஜடேஜா 45*, அஸ்வின்  10* ரன் எடுத்து விளையாடி வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்