பாகிஸ்தானுக்கு ஆப்பு….கிரிக்கெட் அணிக்கு தடை….இந்தியா வேண்டுகோள்…!!

Default Image
  • காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
  • தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நாடுகளுடன் உறவை ICC துண்டிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ICC_க்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.  அதில் புல்வாமா தாக்குதலில் 44 பேர் உயிரிழந்ததையடுத்து உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நாடுகளுடன் உறவை ICC துண்டிக்க வேண்டும்  என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் , அதிகாரிகள் மற்றும் ரசிகர்களுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பை ICC வழங்கும் என நம்புவதாக பிசிசிஐ அந்த கடிதத்தில் கூறியுள்ளது. மேலும்  பாகிஸ்தானுடன் விளையாடுவது தொடர்பாக இந்திய அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுபடடுவோம் என்று பிசிசிஐ  கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்