நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபாரமாக விளையாடி, அத்தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனைப்படைத்தது.தற்போது 3ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர் துவங்கியுள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள் தொடர் வரும் 21ம் தேதி துவங்க உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தாமதமாக பந்து வீசி தொடர்ந்து மூன்று சர்வதேச போட்டிகளில் மிகவும் தாமதமாக பந்து வீசி இந்திய அணி ஹாட்ரிக் அடித்துள்ளது.
இதற்கு முன்னதாக நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகளில் இந்திய அணி தாமதமாக பந்து வீசியதாக சொல்லப்பட்டது.அதற்காக 4 போட்டிக்கு 40 % மும் ,5வது போட்டிக்கு 20% என அடுத்தடுத்து அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றன.அப்படி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசாமல் தாமதமாக பந்து வீசி உள்ளது.இது தொடர்ந்து அணிக்கு மூன்றாவது முறையாகும்.
இது தொடர்பாக கூறப்படுகையில் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் 4 ஓவர்கள் குறைவாக இந்திய அணி வீசியுள்ளது . இதனால் வீரர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.2 பிரிவின் கீழ், இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் தாமதமான பந்து வீச்சை இந்திய கேப்டன் கோலி ஒப்புக்கொண்டார். அதன்படி ஒரு ஓவர்க்கு 20%ம் என, 4 ஓவர்களுக்கு இந்திய வீர்களின் போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 80% அபராதமாக விதிக்கப்பட்டது.சாதனையில் ஹாட்ரிக் படைப்பது மட்டுமல்லாமல் அபராதம் கட்டுவதிலும் இந்திய அணி ஹாட்ரிக் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…