இந்தியா – நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி…இன்று நடைபெறுமா?

Default Image

தொடர் மழை காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட இந்தியா – நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் சவுத்தாம்ப்டனில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. சரியான நேரத்தில் போட்டி தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பாராத நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே அங்கு மழை பெய்ய தொடங்கியது.

இதனால், இந்தியா-நியூசிலாந்து இடையே முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நடைபெறாது என பிசிசிஐ அறிவித்தது.பின்னர்,மழை நின்றதால் மைதானத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

இந்திய நேரப்படி நேற்று இரவு 07:30 மணிக்கு ஆடுகளத்தை ஆய்வு செய்த பின்னர்  போட்டி  நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்தது.

இதனையடுத்து, தொடர் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் உள்ளூர் நேரப்படி நாளை காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்கும் என ஐசிசி அறிவித்தது.

அதன்படி,இன்று காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால்,ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்