இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்ல வந்திருக்கிறது நாங்கள் இல்லை என்று வங்கதேச கேப்டன் ஷகிப் அல்ஹஸன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 2 வில் இடம்பெற்ற இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் நாளை மோதுகின்றன.
புள்ளிப்பட்டியலைப் பொறுத்தவரை இந்தியா 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், வங்கதேசம் 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.
இந்தியா-வங்கதேசம் போட்டியை முன்னிட்டு வங்கதேச கேப்டன் ஷகிப் அல்ஹஸன் ஒரு வினோதமான கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்ல வந்திருக்கிறது நாங்கள் உலகக்கோப்பையை வெல்ல வரவில்லை. மேலும் இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்லும் விருப்ப அணியாக இருக்கிறது.
நாங்கள் இந்தியாவை தோற்கடித்தால் அது வருத்தமாக இருக்கும். இருந்தும் நாங்கள் அந்த வருத்தத்தை உருவாக்க முயற்சி செய்வோம் என்று ஷகிப் அல்ஹஸன் தெரிவித்தார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…