உலகக்கோப்பையில் முதல் முறையாக சாதனை படைத்த இந்தியா !

Default Image

நேற்றைய போட்டியில் இந்திய அணியும் , இலங்கை அணியும் மோதியது. இப்போட்டி   லீட்ஸில்  உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில்  டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் இறங்கிய  இலங்கை 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 264 ரன்கள் எடுத்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 43.3 ஓவர் முடிவில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா ,கே .எல் ராகுல் இருவரும் களமிறங்கி தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இருவருமே சதம் விளாசினார்.இப்போட்டியில் ரோஹித் சர்மா 103 ,கே .எல் ராகுல் 111 ரன்களும் குவித்தனர்.

இதன் மூலம் உலகக்கோப்பையில் இந்திய அணியில்  முதன் முறையாக தொடக்க வீரர்கள் இருவருமே சதம் அடித்து சாதனை படைத்து உள்ளனர்.

 ஒருநாள் போட்டியில் இந்திய அணி எட்டாவது முறையாக தொடக்க வீரர்கள் இருவருமே சதம் அடித்து உள்ளனர்.

மேலும் உலகக்கோப்பையில் தொடக்க வீரர்கள் இருவருமே சதம் அடித்தது இதுவே  மூன்றாவது முறையாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்