டாஸ் வென்று இந்தியா பௌலிங் -மழை காரணமாக 40 ஓவர்களாக குறைப்பு

Default Image

மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்தியா-தென்னாபிரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பௌலிங் தேர்வு செய்திருக்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென்னாபிரிக்க அணி மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ள நிலையில் ஒருநாள் போட்டித்தொடர் இன்று லக்னோவில் தொடங்குகிறது. இன்று 1:30 மணிக்கு தொடங்கவேண்டிய முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 3 மணிக்கு ஆரம்பிப்பதாக முதலில் அறிவித்திருந்த நிலையில் மழைப்பொழிவு இருந்த காரணத்தால் மேலும் தாமதமாக தொடங்கும் என்று கூறப்பட்டது. 3:30 மணிக்கு டாஸ் போடப்பட்டது, டாஸ் வென்ற இந்திய கேப்டன் தவான் முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தார். மேலும் மழை காரணமாக ஆட்டம் 40 ஒவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி: ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான் மற்றும் முகமது சிராஜ்

தென்னாபிரிக்க அணி: ஜான்மேன் மலான், குயின்டன் டி காக்(w), டெம்பா பவுமா(கேப்டன்), ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்