#INDvNZ : 18வது ஓவரிலேயே அபார வெற்றி.! தொடரை கைப்பற்றியது இந்தியா.!

Published by
மணிகண்டன்

17.2 ஓவரில் 155 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வென்று இந்த டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட t20 தொடரின் 2-வது போட்டி இன்று ராஞ்சியில் உள்ள JSCA மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இருவரும் சிறப்பாக விளையாடினார். நிதானமாக விளையாடிய வந்த மார்ட்டின் கப்டில் 5ஓவரில் தீபக் சாஹர் ஓவரில் 31 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேன் வந்த வேகத்தில் 21 ரன் எடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் டேரில் மிட்செல் 31 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து மத்தியில் இறங்கிய க்ளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 34 ரன்கள் குவிக்க அடுத்தடுத்து களம் கண்ட வீரர்கள் சொற்ப ரன் எடுக்க இறுதியாக நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஹர்ஷல் படேல் 2, அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், அஸ்வின் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை கடந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா 36 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து சௌதி பந்தில் குப்திளிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, கே.எல்.ராகுல் 49 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து, சௌதி பந்தில் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும், ரிசப் பண்டும் களத்தில் கடைசி வரை நின்று 17.2 ஓவரில் 155 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி அணியை வெற்றிபெற செய்தனர். இடையில் சூரியகுமார் யாதவ் 1 ரன்னில் ஆட்டமிழந்திருந்தார்.

இந்த போட்டியில் வென்றதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2இல் வெற்றி பெற்று 2-0 என்கிற கணக்கில் நியூஸிலாந்திடம் இருந்து தொடரை கைப்பற்றியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago