காட்டடி அடித்த பாண்டியா.. 6 விக்கெட் வித்தியாசத்தில் டி-20 தொடரை கைப்பற்றிய இந்தியா!

Published by
Surya

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியதை தொடர்ந்து, முதல் டி-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இந்தநிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஒவரில் 194 ரன்கள் அடித்தது. 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – தவான் களமிறங்கினார்கள். சிறப்பான தொடக்கத்தை கொடுத்த கே.எல்.ராகுல் 30 ரன்களில் வெளியேற, பின்னர் கோலி களமிறங்கினார்.

கோலி – தவான் கூட்டணியில் இந்திய அணியின் ஸ்கொர் உயர, அரைசதம் விளாசிய தவான் 52 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 15 ரன்களில் பெவிலியன் திரும்ப, 40 ரன்கள் அடித்து கோலி தனது விக்கெட்டை இழக்க, ஸ்ரேயாஸ் ஐயர் – ஹர்திக் பாண்டியா கூட்டணி களமிறங்கியது. இதில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆட, 19.4 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. அதுமட்டுமின்றி, டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Published by
Surya
Tags: AUSvINDt20

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

6 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago