3 வது டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு..!

Published by
murugan

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தவான் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.  இதில் இரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று கடைசி மற்றும் 3-வது டி20  போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாச மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி  கேப்டன் தவான் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள்: 

ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், பாடிக்கல், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் ராணா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ராகுல் சாஹர், சந்தீப் வாரியர், சேதன் சகரியா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக நவ்தீப் சைனிக்கு பதிலாக சந்தீப் வாரியர் களமிறங்கியுள்ளார்.

இலங்கை அணி வீரர்கள்: 

அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா (விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா,தசுன் ஷானகா (கேப்டன்), தனஞ்சய டி சில்வா, வாணிந்து ஹசரங்கா, ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருணாரத்ன, பாத்தம் நிசங்கா, அகில தனஞ்சய, துஷ்மந்த சாமே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Published by
murugan
Tags: SLvIND

Recent Posts

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

37 minutes ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

54 minutes ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

1 hour ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

1 hour ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

2 hours ago