இந்தியா – ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான 2வது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது…!

Default Image

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது

இன்று ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது ஆகியோர் இடம்பிடித்தனர்.

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது.இதனால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் பந்து வீச்சில் கலீல் ,புவனேஸ்வர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மெல்போர்னில் மழை பெய்து வருவதால் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்