இன்று இந்தியா-ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 போட்டி! வெற்றி வியூகம் என்ன?

Published by
அகில் R

டி20I சூப்பர் 8: நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியும், டி20 உலகக்கோப்பை தொடரின் 43-வது  போட்டியுமான இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்த நிலையில், இன்று இரவு 8 மணிக்கு சூப்பர் 8 சுற்றின் 3-வது போட்டியாக இந்தியா அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது பார்படாசில் உள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

இந்த தொடரில் இனி வரும் அனைத்து போட்டிகளும், இந்திய அணிக்கு மிகமுக்கிய போட்டிகளாகும். இதில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுவதால் எளிதில் வெற்றி பெறலாம் என கருதுவதும் தவறானது. ஆப்கானிஸ்தான் அணி முதல் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடி அதில் 3 வெற்றிகளை பெற்றுள்ளார்கள்.

அதிலும், நியூஸிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடியான பேட்டிங்கும், சுழற் பந்து வீச்சின் ஆதிக்கமும் தான். இந்தியா அணியில் பேட்டிங் வரிசையில் ஒரு சில சறுக்கல்கள் இருப்பதால், ஆப்கானிஸ்தான் அணிக்கு அது ஒரு பெரிய வாய்ப்பாக அமையலாம்.

வெற்றி வியூகம்:

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு, தொடக்கத்தில் களமிறங்கும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் அதிரடியாக விளையாடி ஆக வேண்டும். இந்த தொடரை பொறுத்தவரை இந்த இருவருக்கும் சருக்கலான தொடராகவே அமைந்துள்ளது. இதனால், இதனை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர்.

மேலும், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விராட்  கோலியின் ஃபார்மை குறித்து பேசி இருந்தாலும், ஒரு சிலர் அவர் தொடக்கத்தில் பேட்டிங் இறங்குவதற்கு பதிலாக 3-வதாக களமிறங்கலாம் என பல கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்களை எடுத்த இந்தியா வீரர்களில் விராட் கோலி தான் முதலிடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியை வெல்வதற்கு இந்திய அணியின் வலுவான பந்து வீச்சை சமாளித்து, தக்க நேரத்தில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடினாலே போட்டியை கைப்பற்றலாம் எனவும் பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது கருத்துக்களை கம்மெண்ட்ரியில் தெரிவித்து வருகின்றனர்.

நேருக்கு நேர்:

இந்த இரு அணிகளும் மொத்தம் 3 டி20 உலகக்கோப்பை போட்டிகளை விளையாடியுள்ளனர். அதில் 3 போட்டிகளையும் இந்தியா அணி தான் கைப்பற்றியுள்ளது. மேலும், இதை தாண்டி 4 சர்வேதச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதிலும் ஆதிக்கம் செலுத்தி 4 போட்டிகளையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

சாத்தியமான 11 வீரர்கள்

இந்தியா அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்),சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

ஆப்கானிஸ்தான் அணி

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ரஷித் கான் (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், குல்பாடின் நைப், அஸ்மத்துல்லாஹ் உமர்சாய், நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், நூர் அஹ்மத், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

Published by
அகில் R

Recent Posts

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு -பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான்  அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…

28 minutes ago

கட்டாய கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை! சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…

1 hour ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு எதிரொலி! பள்ளிக்கு சீல்!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…

1 hour ago

Bye Bye ஸ்டாலின்.., 2026-ல் திமுகவுக்கு பெரிய ‘ஓ’! இபிஎஸ் கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : நீதிபதி மாற்றம்.. தீர்ப்பு தேதியில் எந்த மாற்றமா.?

பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

2 hours ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…

3 hours ago