நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டித்தொடர்களில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்க இரண்டாவது போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், ஷிகர் தவான்(28),கில்(13), என ஓப்பனிங் வீரர்கள் சொதப்ப, அதன் பின் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் ஓரளவு ரன்கள்(49) குவித்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார்(6) ரன்களுக்கும், ரிஷப் பந்த்(10), தீபக் ஹூடா(12) என நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் திரும்பினர். வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனியாக நிலைத்து நின்று அரைசதம் அடித்து இந்தியா, 200 ரன்களைக் கடக்க போராடினார்.
முடிவில் இந்திய அணி, 47.3 ஓவர்களில் 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கடைசி வரை போராடிய வாஷிங்டன் சுந்தர், 51 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே, டேரில் மிட்சேல் தலா 3 விக்கெட்களும், டிம் சவுதி 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…