இந்தியா-நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி இன்று முதல் ஒருநாள் போட்டியில் ஆக்லாந்தில் விளையாடியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தவான், சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் அரைசதத்தால் இந்திய அணி 300 ரன்களைக்கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் 80, தவான் 72, சுப்மன் கில் 50, சாம்சன் 36, வாஷிங்டன் சுந்தர் 37* ரன்கள் குவித்தனர். நியூசிலாந்து சார்பில் டிம் சவுதி மற்றும் பெர்குசன் தலா 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.
307 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லேதம் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச்செய்தனர். சிறப்பாக விளையாடி டாம் லேதம் தனது சதத்தை நிறைவு செய்தார்.
இதனால் 47.1 ஓவர்களிலேயே அந்த அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக டாம் லேதம் 145 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 94 ரன்களும் குவித்தனர். இந்தியா தரப்பில் உம்ரன் மாலிக் 2 விக்கெட்களை வீழ்த்தினார். டாம் லேதம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…