இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 365 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்கத்தில் இருந்து தடுமாறி விளையாடி வந்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 75.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 205 ரன்கள் எடுத்தனர்.
இதில் இந்திய அணியில் அக்ஸர் 4, அஸ்வின் 3, சிராஜ் 2, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 160 ரன்கள் முன்னிலையில் உள்ளது. அதிகபட்சமாக இந்திய அணியில் ரிஷப் பண்ட் 101 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 96* ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்றார்.
இதில் இங்கிலாந்து அணியில், ஜேம்ஸ் ஸ்டோக்ஸ் 4, ஆண்டர்சன் 3, ஜாக் லீச் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்நிலையில், இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சிஸை தொடங்கியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…