#INDvENG: இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்யவுள்ள இந்தியா.. தொடரை கைப்பற்றுவது யார்?

Default Image

இந்தியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3 ஆம் மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, முதலில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. தற்பொழுது 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாம் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இதனைதொடர்ந்து இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேவில் தொடங்கவுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. இந்த போட்டியிலும் சூரியகுமார் யாதவ் இடம்பெறவில்லை. அதேபோல, நடராஜன் இடம்பெற்றுள்ளார்.

விளையாடும் வீரர்கள்:

இந்தியா:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், பிரசீத் கிருஷ்ணா, நடராஜன்.

இங்கிலாந்து:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், டேவிட் மாலன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் குர்ரான், ஆதில் ரஷீத், ரீஸ் டோப்லி, மார்க் வூட்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்