சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் சதம் விளாசினார் அஷ்வின்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி, சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 329 ரன்கள் எடுத்திருந்தது.பின்னர் முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு சுருண்டது.சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனால் இந்திய அணி 195 ரன்கள் முன்னிலையில் பெற்று, நேற்று தனது 2-வது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது.
தொடர்ந்து இன்றும் இந்திய அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் இந்திய வீரர் அஸ்வின் 134 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டரிகள், 1 சிக்ஸ் அடித்து சதம் அடித்துள்ளார்.இங்கிலாந்து எதிரான முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் 2வது இன்னிங்சில் சதம் விளாசியுள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் 5-வது சதம் இதுவாகும். தற்போது வரை இந்திய அணி 83 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் அஸ்வின் 109 ரன்களுடனும் ,சிராஜ் 9 ரன்களுடனும் உள்ளனர்.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…