ஆஸ்திரேலியா சென்றடைந்தது, கோலி தலைமையிலான இந்திய அணி!

Published by
Surya

ஆஸ்திரேலியாவிற்கு சென்றடைந்த இந்திய அணி, 3 ஒருநாள், 3 டி-20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை விளையாடவுள்ளது.

ஐபிஎல் தொடர் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்கேற்ற இளம் வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். ஆயினும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா அணியின் இடம்பெறாதது, ரசிகர்களிடையே பெருமளவில் ஏமாற்றத்தை அளித்தது. அதனைதொடர்ந்து அவர், டெஸ்ட் தொடர்களில் ஆடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள், நேற்று இரவு துபாயில் இருந்து புறப்பட்டு, ஆஸ்திரேலியா சென்றடைந்தனர். அதன்படி ஒருநாள் போட்டி, 27ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து நடைபெறவுள்ள டி-20 தொடர், டிசம்பர் 4ஆம் தேதி 11ஆம் தேதி நடைபெறும் எனவும், நான்கு டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் 17ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

வீரார்கள் ஆஸ்திரேலியா வந்தடைந்ததும், சிட்னி நகரில் இருக்கும் தனிப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்படுவர். அதன்பின் நடத்தப்படும் கொரோனா பரிசோதனையின் முடிவுகள் “நெகட்டிவ்” என வந்தால், அவர்கள் அடுத்த நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்.

மேலும், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பகல் – இரவு ஆட்டமாக அடிலைட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்குப் பின் விராட் கோலி இந்தியா திரும்பவுள்ளதால், அவருக்கு பதிலாக ரோஹித் ஷர்மா அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்பார்.

Published by
Surya

Recent Posts

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு -பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு -பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான்  அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…

28 minutes ago

கட்டாய கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை! சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…

1 hour ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு எதிரொலி! பள்ளிக்கு சீல்!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…

1 hour ago

Bye Bye ஸ்டாலின்.., 2026-ல் திமுகவுக்கு பெரிய ‘ஓ’! இபிஎஸ் கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : நீதிபதி மாற்றம்.. தீர்ப்பு தேதியில் எந்த மாற்றமா.?

பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

2 hours ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…

3 hours ago