நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று(பிப்ரவரி 21) வெலிங்டன், பேசின் ரிசர்வ் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், இந்திய அணியில், பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், புஜாரா, விராத் கோஹ்லி(கேப்டன்), ரகானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.. இந்திய அணியில், சகா, சுப்மான் கில், நவ்தீப் சைனி மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது வரை இந்திய அணி ஷா, புஜாரா, கோலி ஆகிய மூன்று விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களில் ஆடிக்கொண்டு இருக்கிறது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…