IND – ENG: முதல் டி20 போட்டியில் இந்திய அணி 41 ரன் வித்யாசத்தில் தோல்வி!!

Default Image
  • இந்திய மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
  • முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது டி20 தொடரின் முதல் போட்டி குவஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ரன் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய மகளிர் அணியின் துவக்க வீரர்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இதன் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது இந்திய மகளிர் அணி 20 ஓவர்களின் முடிவில் 119 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணியிடம் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்