அடிலெய்டில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி!! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்திய அணி!!

Default Image

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கியது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது

இந்நிலையில் இரண்டாவது போட்டி நாளை காலை இந்திய நேரப்படி 8.50 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் துவங்க உள்ளது முதல் போட்டியில் தோற்று விட்டதால் இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த போட்டியில் தோல்வியடைந்தால் இந்திய அணி தொடரை இழக்க நேரிடும். இந்நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக் , விராட் கோலி ,ரோகித் சர்மா, மகேந்திரசிங் தோனி என பல இந்திய வீரர்கள் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். முதல் போட்டியில் சொதப்பிய வீரர்கள் இந்த போட்டியில் கழற்றி விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்