பதிலுக்கு பதில்., அபார வெற்றி – ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2ம் இடத்தில் இந்தியா.!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்துள்ளது.

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் முதல் சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. இந்தியா நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 13ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 329 ரன்கள் அடித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்திருந்தார்.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து, 429 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தந்து 2வது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 164 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளனர்.

மேலும் இந்த வெற்றியால் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இங்கிலாந்து அணி மீண்டும் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனிடையே, சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி வாய்ப்பை இந்திய அணி இந்த வெற்றி மூலம் தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…

1 hour ago

ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!

வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…

4 hours ago

தற்கொலை முயற்சி அல்ல.. மருத்துவமனையில் பாடகி கல்பனா.! மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…

5 hours ago

SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…

5 hours ago

மீண்டும் மீண்டும் ரஜினியிடம் பாராட்டு! பிரதீப் காட்டில் மழைதான்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…

6 hours ago

பயணிகள் கவனத்திற்கு…தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…

8 hours ago