ஐபிஎல் 2024 : கோலியின் அதிரடியில் … கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்கு ..!!

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.  தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலியும், பாஃப் டு பிளெசீயும் களமிறங்கினர். எதிர்பாராத விதமாக பாஃப் டு பிளெசீ 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஃபார்மில் இருந்த விராட் கோலி கொல்கத்தா அணி பந்து வீச்சை பவுண்டரிகள் பறக்க விட்டார்.

அவருடன் கேமரூன் கிரீனும் பொறுப்புடன் விளையாடனார், இதனால் பெங்களுரு அணி ஸ்கோர் உயர தொடங்கியது. களத்தில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஆனாலும், மற்ற வீரர்களின் மெதுவான ஆட்டத்தால் பெங்களூரு அணியின் ஸ்கோர் கூடினாலும் உயராமலே இருந்தது.

பெங்களூரு அணியில் அதிரடி காட்டுவார் என களமிறங்கிய மேக்ஸ்வெல்லும் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் தனி ஒரு ஆளாக நின்று விராட் கோலி ஆட்டமிழக்காமல் ஆர்சிபி ஸ்கொரை உயர்த்தி கொண்டிருந்தார். இறுதி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கும் விராட் கோலியுடன் அதிரடி காட்ட பெங்களூரு அணி நல்ல ஸ்கொரை பதிவு செய்தது.

இறுதியில், 20 ஓவருக்கு பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் விராட் கோலி 58 பந்துகளுக்கு 83* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணியில் ஹாஷித் ராணாவும், ரஸ்ஸல்லும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதன் மூலம் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது கொல்கத்தா அணி.

Recent Posts

அமித்ஷா vs எடப்பாடி பழனிச்சாமி! 2026-ல் கூட்டணி ஆட்சியா? என்ன சொன்னார்கள்?

சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…

15 minutes ago

ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!

டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

50 minutes ago

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

8 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

9 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

11 hours ago