உலக கோப்பையில் நான் இல்லை.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.! ஹர்திக் பாண்டியா உருக்கம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

உலகக்கோப்பை தொடரில் இருந்தே இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நீக்கப்பட்டார். இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி, தொடர்ந்து 7 வெற்றிகளை குவித்து உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னறியது.

இந்த சூழலில், கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்து நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தினால் உலகக்கோப்பை தொடரில் எஞ்சிய போட்டியிகளில் இருந்து நீக்கப்படுவதாக பிபிசிஐ அறிவித்தது. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி புனேவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் 17வது லீக் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து காயம் காரணமாக இரண்டு உலகக்கோப்பை லீக் போட்டிகளில் அவர் ஆடவில்லை. காயம் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹர்த்திக் பாண்டியா, அரையிறுதி சுற்றுக்கு முன் இந்திய அணியில் இணைவார் என கூறப்பட்ட நிலையில், அவர் உலகக்கோப்பை எஞ்சிய போட்டிகளில் இருந்தே நீக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்.!

நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். முதல் நான்கு போட்டிகளில் அணியில் 3வது வேகப் பந்துவீச்சாளராக இருந்தார். இந்த சூழலில் காயம் காரணமாக உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது. ஹர்த்திக் பாண்டியாவுக்கு பதிலாக இளம் இந்திய வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஹர்திக் பாண்டியா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உலகக் கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் நான் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இது கடினமாக உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு போட்டியிலும்,  இந்திய அணி வீரர்களை உற்சாகப்படுத்தி, நான் அணியுடன் இருப்பேன். மேலும், எனக்கு அளித்த வாழ்த்துக்களுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி. இந்திய அணி சிறப்பாக உள்ளது. அனைவரையும் பெருமைப்படுத்துவோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என உருக்கமாக கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago