எனக்கு 50 வயது இல்லை..நான் 25 வயது இளைஞன்…சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி பதிவு.!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி தன்னுடைய 50-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர்.

குறிப்பாக ரசிகர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் என அழகாக எடிட் செய்து கிரிக்கெட் கடவுளுக்கு தங்களுடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் சச்சின் டெண்டுல்கர் பெயரை ட்ரெண்டிங்கில் வைத்திருந்தார்கள்.

இந்த நிலையில், அதற்கு நன்றி தெரிவித்துள்ள சச்சின் தனது டிவிட்டர் பக்கத்தில் ” களத்தில் வென்ற கோப்பைகளை தவிர , களத்திற்கு வெளியே உள்ள நட்புகளும் வாழ்க்கையை சிறப்புறச் செய்கின்றன. உங்கள் அன்பையும் பாசத்தையும் இவ்வளவு ஏராளமாகப் பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
Along with the trophies you win on the field, the friendships off the field are what make life special. To receive all your love and affection in such abundance has been very heartwarming for me. I’m short of words to explain the warmth I’ve received with all the beautiful…
— Sachin Tendulkar (@sachin_rt) April 27, 2023
நீங்கள் அனைவரும் எனக்கு அனுப்பிய அனைத்து அழகான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் செய்திகள் மூலம் நான் பெற்ற அரவணைப்பை விளக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி. எனக்கு 50 வயது இல்லை – 25 வருட அனுபவமுள்ள 25 வயது இளைஞன்” என பதிவிட்டுள்ளார். சச்சினின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.