ஐசிசி தனது ஃபேஸ்புக் பதிவில் திரிமன்னேவின் புகைப்படத்தை பதிவு செய்து, கருணாரத்னவை தவறாக டேக் செய்தது. இதனை பார்த்த கருணாரத்ன, “அது நான் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.
இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பங்களாதேஷ் அணி, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் லஹிரு திரிமன்னே இரட்டை சதம் அடித்து அசத்தினார். அதனை பாராட்டும் விதமான ஐசிசி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு, “Precision. Elegance. Poise” என்று பதிவிட்டுள்ளது.
ஆனால் அவருக்கு பதிலாக, இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னவை டேக் செய்தது, ஐசிசி. இதனை ஒருவர், “டியர் ஐசிசி, அவர் திரிமன்னே.. கருணாரத்ன இல்லை” என்று கமெண்ட் செய்துள்ளார். மேலும் அந்த பதிவை பார்த்த திமுத் கருணாரத்ன. “அது நான் இல்லை” என்று கமெண்ட் செய்துள்ளார்.
இதனைதொடர்ந்து ஐசிசி, அந்த பதிவை நீக்கி, புதிதாக மற்றொரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. அந்தப்பதிவில் சரியாக லஹிரு திரிமன்னேவை டேக் செய்தது. இந்த பதிவிலும் ஒருவர், திமுத் ஒரு சிறப்பான வீரர் என்று கமெண்ட் செய்துள்ளார். ஐசிசியின் இந்த தவறையும், கருணாரத்னவின் இந்த கமண்டையும் ரசிகர்கள் அதிகளவில் பரப்பிவருகின்றனர்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…