#BIGNEWS ஐ.சி.சி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2020 ஒத்திவைப்பு.!

Published by
Castro Murugan

ஏழாம் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன்காரணமாக மார்ச் மாதம் முதல் நடக்கவுள்ள அனைத்து விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகிறது.

இதன்காரணமாக இந்தாண்டு இறுதியில் ஏழாம் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்த நிலையில், தற்பொழுது கொரோனா வைரஸ்  காரணமாக  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை இந்த போட்டிகள் நடைபெறவிருந்தது. ஆனால் உலகளவில் தற்பொழுது கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் காரணத்தினால், இந்த போட்டிகளை தள்ளிவைத்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளை வருகின்ற 2021 ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் எனவும் இறுதிப் போட்டி வருகின்ற 2021 நவம்பர் 14-ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Castro Murugan
Tags: worlcup t20

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

16 minutes ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

2 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

2 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

3 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

4 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

5 hours ago