ICC Ranking : இங்கிலாந்து அணி இந்தியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த தொடரின் 2-வது மற்றும் 3-வது போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிக சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தார்.
அவரது சிறப்பான ஆட்டத்தால் ஐசிசி தரவரிசையில் மாற்றம் நிலவி உள்ளது. மேலும், அந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மானான ஜோ ரூட்டும் தரவரிசையில் இடம் மாறியுள்ளார். இந்த தொடரில் ஜெய்ஸ்வாலின் இரண்டு இரட்டை சதத்தால் இந்த மாற்றமானது நடந்துள்ளது. இதே போல இவர் அடுத்தடுத்து விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாள் முதலிடத்தில் வேகமாக பிடித்துவிடுவார் என கருதப்படுகிறது.
ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆகும் போது டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 69-வது இடத்தில் இருந்தார். அவர் அறிமுகம் ஆகும் போது இந்திய அணிக்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறேன். என்னால் முடிந்த உழைப்பை இந்திய அணிக்காக கொடுப்பேன் என கூறி இருந்தார்.
தற்போது, அவர் சொல்லியதை உறுதி செய்யும் விதமாக 69-வது இடத்திலிருந்து படிப்படியாக முன்னேறி 12-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இது மிகப்பெரிய மாற்றமாகும். மேலும், இங்கிலாந்து அணியின் வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு பின்தங்கி உள்ளார். இது இந்த டெஸ்ட் தொடரில் அவர் ஒரு சதம் மட்டுமே அடித்தார்.
மேலும், நியூஸிலாந்து வீரரான காணே வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். இந்தியாவின் 22 வயதே ஆன இளம் வீரர் ஜெய்ஸ்வாலின் இந்த முன்னேற்றம் அவரை பின் தொடரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…
அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…
அமெரிக்கா : இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா…