இந்தியாவில் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இலங்கை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றுடன் வெளியேறியது. இலங்கை அணி 9 லீக் போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும் , 7 போட்டிகளில் தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருந்து வெளியேறியது.
அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 302 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி படுதோல்வியை சந்தித்தது.குறிப்பாக வனிந்து ஹசரங்கா உட்பட சில முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுவும் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இந்த தோல்விக்கு பின்னர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் கலைத்து புது நிர்வாகிகளை நியமித்தார்.
இந்த செயல் ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானதாகும். இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் இலங்கை அரசு தலையீடு இருப்பதால் இலங்கை அணியை ஐசிசி தற்காலிமாக தடை செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை விரைவில் உறுதி செய்ய வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…