ஐசிசி விருதுகள் 2023: சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் பெயர் பரிந்துரை..!

2023-ம் ஆண்டு ஐசிசி விருதுகளுக்கான பட்டியலில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ்  இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து இந்த இரு வீரர்களையும் ஐசிசி பரிந்துரை செய்துள்ளது. இவர்களுடன் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திராவும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசிசி அனைத்து பிரிவுகளுக்கும் தலா நான்கு வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளது. அதன்படி ஐசிசியின் இந்த ஆண்டின் வளர்ந்து வரும் ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான தேர்வுப் பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். ஜெய்ஸ்வாலுடன் ரச்சின் ரவீந்திர, ஜெரால்ட் கோட்ஸி மற்றும் தில்ஷன் மதுஷங்க ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் இதுவரை 15 டி20 போட்டிகளில் விளையாடி 430 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் ஒரு சதம் மற்றும் மூன்று அரை சதங்கள் அடித்துள்ளார். ஜெய்ஸ்வால் தனது ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளார். ஆனால், தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரில் அவரால் சிறப்பாக எதையும் சாதிக்க முடியவில்லை.

ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார். டி20 போட்டியில் இந்தியாவுக்காக சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். டி20 போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாகவும் சூர்யகுமார் யாதவ் இருந்துள்ளார். சூர்யகுமார் யாதவ் இதுவரை 60 டி20 போட்டிகளில் விளையாடி 2141 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள் மற்றும் 17 அரை சதங்கள் அடித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் உடன்  சிக்கந்தர் ராசா, அல்பேஷ் ரம்ஜானி, மார்க் சாப்மேன் ஆகியோரும் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்