ஐசிசி 2023 கனவு அணி அறிவிப்பு.. கேப்டனாக சூர்யகுமார்..!

Published by
murugan

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களை தேர்வு செய்து 2023 ஆம் ஆண்டின் சிறந்த கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)  அறிவித்துள்ளது. அந்த கனவு அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரைத் தவிர மேலும் மூன்று இந்திய வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற பெரிய வீரர்கள் இந்த அணியில் இடம் பெறவில்லை, ஆனால் ஐசிசி மற்ற இந்திய நட்சத்திரங்களான ரவி பிஷ்னோய், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்றவர்களை 11 பேர் கொண்ட அணியில் சேர்த்துள்ளது.

முதல் துவக்க வீரராக ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியாவுக்காக ஜெய்ஸ்வால் அறிமுகமானார். இவர் கடந்த ஆண்டு 14 போட்டிகளில் 430 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் இங்கிலாந்தின் பிலிப் சால்ட் 2-வது துவக்க வீரராக உள்ளார். கடந்த ஆண்டு பிலிப் சால்ட் டி20 தொடரில் ஐந்து போட்டிகளில்  331 ரன்கள் எடுத்தார்.

#INDvENG : முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி விலகல்!

3-வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன்  உள்ளார். 4-வது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக உள்ளார். நியூசிலாந்தின் மார்க் சாப்மேன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். ஜிம்பாப்வேயின் ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா ஆறாவது இடத்தைப் பிடித்தார்.  7-வது இடத்தில் உகாண்டா அணியின் அல்பேஸ் ரம்ஜானி தேர்வாகி அந்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அயர்லாந்தின் மார்க் அடேய்ர் 8-வது இடத்தில் உள்ளார். ஜிம்பாப்வேயின் ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா மற்றும் அயர்லாந்தின் மார்க் அடேய்ர் ஆகியோரின் இரு பெயர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சிக்கந்தர் ராசா 30 போட்டிகளில் 55 விக்கெட்டுகளையும், அயர்லாந்தின் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் மார்க் அடேய்ர் 26 விக்கெட்டுகளை எடுத்தார். ஒவ்வொரு 13 பந்துகளுக்கும் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

பந்துவீச்சில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 9-வது இடத்தை பிடித்தார். அதே போல வேகப்பந்து ரிச்சர்ட் ங்கரவா10-வது இடத்தை பிடித்தார். இவர் ஜிம்பாப்வே அணிக்காக 13 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 11-வது இடத்தை பிடித்தார். அர்ஷ்தீப் கடந்த ஆண்டு இந்தியாவுக்காக 21 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ICC ஆடவர் T20 ஆண்டின் சிறந்த அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், பில் சால்ட், நிக்கோலஸ் பூரன், மார்க் சாப்மேன், சிக்கந்தர் ராசா, அல்பேஷ் ரம்ஜானி, மார்க் அடேர், ரவி பிஷ்னோய், ரிச்சர்ட் நாகர்வா, அர்ஷ்தீப் சிங்

Published by
murugan

Recent Posts

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

17 minutes ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

1 hour ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

2 hours ago

இபிஎஸ் தலைமையில் மா.செ கூட்டம்.! முதல் வரிசையில் செங்கோட்டையன்!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…

3 hours ago

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…

4 hours ago

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

4 hours ago