ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஸ்டீவ் ஸ்மித்தை வரும் டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக நியமித்துள்ளதுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் சாப்பல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஒரு வருடம் கிரிக்கெட்டில் தடை செய்யப்பட்டார். மேலும், அவர்களது கேப்டன் பொறுப்பும் பறிபோனது. இனி கேப்டன் பொறுப்பிற்கு வர முடியாது எனவும் கூறப்பட்டது.
ஆனால், தற்போது, வரும் டிசம்பர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த துணை கேப்டன் பொறுப்பை ஸ்டீவ் ஸ்மித்திற்கு வழங்கியது தொடர்பாக முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் இயான் சப்பல் அதிருப்தி தெரிவித்துள்ளார். குற்றம் எப்போதும் குற்றமே. ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்தியது குற்றமே. அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாது என குறிப்பிட்ட நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் அறிவிப்பு அதிருப்தி அளிப்பதாக கூறியுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…