குற்றம் எப்போதும் குற்றமே.! ஸ்மித்க்கு துணை கேப்டன் பொறுப்பு.! முன்னாள் கிரிக்கெட் வீரர் காட்டம்.!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஸ்டீவ் ஸ்மித்தை வரும் டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக நியமித்துள்ளதுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் சாப்பல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஒரு வருடம் கிரிக்கெட்டில் தடை செய்யப்பட்டார். மேலும், அவர்களது கேப்டன் பொறுப்பும் பறிபோனது. இனி கேப்டன் பொறுப்பிற்கு வர முடியாது எனவும் கூறப்பட்டது.
ஆனால், தற்போது, வரும் டிசம்பர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த துணை கேப்டன் பொறுப்பை ஸ்டீவ் ஸ்மித்திற்கு வழங்கியது தொடர்பாக முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் இயான் சப்பல் அதிருப்தி தெரிவித்துள்ளார். குற்றம் எப்போதும் குற்றமே. ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்தியது குற்றமே. அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாது என குறிப்பிட்ட நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் அறிவிப்பு அதிருப்தி அளிப்பதாக கூறியுள்ளார்.