சென்னை : இந்தியா அணியின் கேப்டனான ரோஹித் சர்மா அவரது ஓய்வை குறித்து தற்போது அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருந்தார்.
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இவர் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றி கேப்டனாக இருக்கும் இவர் இந்திய அணியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இவர் ராசி இல்லாத ஒரு கேப்டனாகவே இருந்து வருகிறார்.
தற்போது, வருகிற டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா அணியின் கேப்டனாக செயலாற்ற உள்ளார். இதுதான் அவரது கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் எனவும் இதன் பிறகு ரோஹித் சர்மா ஓய்வு பெற்று விடுவார் என்றும் இணையத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வந்தது.
தற்போது, ரோஹித் சர்மா அவர் ஓய்வு பெறுவதை பற்றி துபாய் ஐ 103.8 (Dubai Eye 103.8) என்ற வானொலி நிலையத்திற்க்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். அவர் இதை பற்றி கூறுகையில்,”இந்த 17 வருட பயணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாடி உலகக்கோப்பைக்கு எனது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவேன் என்று நம்புகிறேன்.
நம் நாட்டின் இந்தியா அணிக்காக கேப்டனாக இருப்பதை நான் கவுரவமாக நினைக்கிறேன். மேலும், இந்திய கிரிக்கெட் அணிக்கு நானும் ஒரு நாள் கேப்டனாக இருப்பேன் என ஒரு நாளும் நினைத்ததில்லை. மக்கள் சொல்வது போல நல்லவர்களுக்கு நல்லதே கிடைக்கும் என்பது உண்மைதான். அதே போல இந்திய அணியின் கேப்டனாக நான் பொறுப்பேற்றவுடன் இதை தான் என் அணியினரிடம் கூறுவேன்.
அது என்னவென்றால் ‘இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும் இது தனிப்பட்ட ஒருவருக்காக மட்டும் அல்லமால் அணிக்காக விளையாட வேண்டும் அப்படி செய்தல் கோப்பை தட்டி தூக்கலாம்’ மேலும், நான் ஒரு மனிதனாக எனது வாழ்க்கையில் நிறைய ஏற்றம் இறக்கங்களை பார்த்துள்ளேன்”, என்று துபாய் ஐ 103.8 என்ற வானொலி நிலையத்திற்க்கு அளித்த பேட்டியில் பேசி இருந்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…