அடுத்த சீசனில் தோனி விளையாடவில்லை என்றால் நானும் விளையாடமாட்டேன் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னா இருவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2020- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தனர். இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் இருவரும் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்கள். இவர்களுக்கிடையே இருக்கும் நட்புறவை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அடுத்தாண்டு தோனி சிஎஸ்கே விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள் நிலையில் தோனி ஆடவில்லை என்றால் நானும் ஆடமாட்டேன் என ரெய்னா கூறியுள்ளார்.
இதுகுறித்து ரெய்னா பேசுகையில், இன்னும் சில ஆண்டுகள் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும். வருகின்ற ஐபிஎல் தொடர்களில் நான் சென்னை அணிக்காக மட்டுமே விளையாடுவேன். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன்.
அடுத்த சீசனில் தோனி விளையாடவில்லை என்றால் நானும் விளையாடமாட்டேன். நாங்கள் இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறோம். இந்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் நாங்கள் வென்றால் அடுத்தாண்டு தோனி விளையாட நான் அவரை சமாதானப்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…