அடுத்த சீசனில் தோனி விளையாடவில்லை என்றால் நானும் விளையாடமாட்டேன் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னா இருவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2020- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தனர். இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் இருவரும் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்கள். இவர்களுக்கிடையே இருக்கும் நட்புறவை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அடுத்தாண்டு தோனி சிஎஸ்கே விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள் நிலையில் தோனி ஆடவில்லை என்றால் நானும் ஆடமாட்டேன் என ரெய்னா கூறியுள்ளார்.
இதுகுறித்து ரெய்னா பேசுகையில், இன்னும் சில ஆண்டுகள் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும். வருகின்ற ஐபிஎல் தொடர்களில் நான் சென்னை அணிக்காக மட்டுமே விளையாடுவேன். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன்.
அடுத்த சீசனில் தோனி விளையாடவில்லை என்றால் நானும் விளையாடமாட்டேன். நாங்கள் இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறோம். இந்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் நாங்கள் வென்றால் அடுத்தாண்டு தோனி விளையாட நான் அவரை சமாதானப்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…