சாவடிச்சிடுவேன்! கோபத்தில் வீரரை கடுமையாக திட்டிய அஸ்வின்! நடந்தது என்ன?

Published by
பால முருகன்

TNPL : தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கி தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்  ரவிச்சந்திரன் அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ்  அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.அடுத்ததாக 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றிபெற்றாலும் கூட போட்டியின் நடுவே கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின்  கடுமையாக கோபமடைந்து அணியின் சக வீரரை திட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 16-வது ஓவரில் திண்டுக்கல் வீரர்கள் ரன் ஓடும்போது அலட்சியமாக  செயல்பட்டுள்ளனர். இதனால் தான் அஸ்வின் மிகவும் கடுப்பாகினார்.

டக் -அவுட்டில் அமர்ந்து இருந்த அஸ்வின் வேகமாக எழுந்து சாவடிச்சிருவன் ஒழுங்கா விளையாடு என்பது போல கடும் கோபத்துடன் கத்தினார். இதனை பார்த்த அங்கிருந்த வீரர்கள் பலரும் அதிர்ச்சியாக அஸ்வினை பார்த்தார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் எம்மாடி அஸ்வினுக்கு இவ்வளவு கோபம் வருமா? என்பது போல கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

20 minutes ago

அஸ்வினை நிறுத்துங்க..திரிபாதியை தூக்குங்க! சென்னைக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அட்வைஸ்!

சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

24 minutes ago

இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பேச்சு!

சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

1 hour ago

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

2 hours ago

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…

3 hours ago

ஜிவி பிரகாஷுடன் டேட்டிங்கா? டென்ஷனாகி விளக்கம் கொடுத்த திவ்யா பாரதி!

சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…

3 hours ago