“தந்தையின் ஆசிர்வாதத்தால் 5 விக்கெட்களை வீழ்த்தினேன்” – சிராஜ் நெகிழ்ச்சி!

Published by
Surya

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து இந்திய அணி, 336 ரன்கள் அடித்தது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 294 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்களும், வார்னர் 48 ரன்கள் அடித்தார். பந்துவீச்சை பொறுத்தளவில் சிராஜ் தலா 5 விக்கெட்களும், ஷர்த்துல் தாக்குர் தலா 4 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்கள்.
அதில் முகமது சிராஜ் 19.5 ஓவர்கள் வீசி 73 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் லாபஸ்சேன், ஸ்மித் விக்கெட்டுகளும் அடங்கும்.

இந்நிலையில் நேற்று நடந்த நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் சிராஜ், “எனது தந்தை உயிரோடு இருந்தால், அவர் நிச்சயம் மகிழ்ச்சி அடைந்திருப்பார். அவரது ஆசிர்வாதத்தால் நான் தற்போது ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளேன். எனது தந்தை இருந்திருந்தால் நான் நிச்சியம் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “என் தந்தை மறைவிற்கு பின் எனக்கு ரொம்ப கடினமாக இருந்தது. எனது அம்மாவிடம் பேசி நான் தைரியத்தை பெற்றுக் கொண்டேன். இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்ற எனது தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் நான் முழு கவனமாக இருக்கின்றேன்” என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணி, 324 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் களமிறங்கவுள்ளது. 1-1 என இரு அணிகளும் சமமாக உள்ளதால், இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாகியுள்ளது.

Published by
Surya

Recent Posts

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…

53 minutes ago

டப்பா ரோலுக்கு ஆண்டி ரோலே மேல்..சீண்டிய நடிகைக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி!

சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…

1 hour ago

விலகல் முடிவில் உறுதியாக இருக்கும் துரை வைகோ…ஏற்க மறுக்கும் மதிமுக தலைமை!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…

3 hours ago

திமுக கூட்டணியில் பாமகவா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்?

சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…

3 hours ago

இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…

4 hours ago

தம்பி இது தீர்வு இல்லை…தற்கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர்..போலீசாரின் செயல்?

கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…

4 hours ago