ஆட்ட நாயகனாக இவர்தான் இருப்பார் என்று நினைத்தேன் – காட்டடி மன்னன்.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஆட்டநாயகன் விருதை ஹர்திக் பாண்டியா தட்டிச்சென்றார். 

இன்று சிட்னியில் நடைபெற்ற 2வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஒவரில் 194 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு 195 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 22 பந்துகளில், 42 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதனைத்தொடர்ந்து, ஆட்டநாயகன் விருது ஹர்திக் பாண்டியாக்கு வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், நான் ஸ்கோர்போர்டைப் பார்த்து விளையாட விரும்புகிறேன். இதனால் எந்த பந்து வீச்சாளர்களை குறிவைப்பது என்று எனக்குத் தெரியும்.

நான் இந்த சூழ்நிலைகளில் பலமுறை இருந்திருக்கிறேன். கடந்த காலங்களில் நான் செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டேன். எனது விளையாட்டு எப்போதுமே நான் சுமக்கும் நம்பிக்கையைச் சுற்றியே இருக்கிறது. நாங்க பெரிய ரன்களை சேஸ் செய்யும் போது நேரங்களை நான் எப்போதும் நினைவில் கொள்வேன். டி20-களில் நீங்கள் நினைப்பதை விட அதிக நேரம் இருக்கிறது.

எங்களுக்கு 30 பந்துகளில் 70-80 தேவைப்பட்டால், நான் அதை 12 பந்துகளாக நினைத்து இறுதி முடிவை விட செயல்பாட்டில் அதிக கவனம் செலுத்துகிறேன். ஆஸ்திரேலிய வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தார்கள். நடராஜனும் சிறப்பாக செயல்பட்டார். அவர் ஆட்ட நாயகனாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.  ஏனென்றால், நடராஜனை தவிர மற்ற பந்துவீச்சாளர்களுக்கு இந்த போட்டி சாதகமாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…

15 minutes ago

“இனி கட்சிப் பதவிகளில் ஈடுபட மாட்டார்”…பகுஜன் சமாஜ் கட்சி பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…

1 hour ago

பெண்களின் வரலாற்று விண்வெளி பயணம்! பிரபல பாப் பாடகர் கேட்டி பெர்ரி உட்பட 6 பேர்!

டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…

2 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…

2 hours ago

தமிழ் சினிமாவில் சோகம்! பிரபல இயக்குனர் திடீர் மரணம்!

சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…

3 hours ago

இனி மீன் விலை தாறுமாறு தான்! நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைகாலம்!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…

3 hours ago